Yezhaigalin Belanae - ஏழைகளின் பெலனே J31

ஏழைகளின் பெலனே
எளியோரின் திடனே-2
பெருவெள்ளத்தில் புகலிடமே
பெரும் கன்மலையின் நிழல் நீரே-2

எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனே
உங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்
எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனே
எந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம்

உங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்
எந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம்-ஏழைகளின்

1.வறண்ட வாழ்விலே நீரூற்று நீரே
கசந்த வாழ்விலே மதுரமும் நீரே-2
திசை தெரியாமல் அலைந்த வாழ்க்கையில்
இனிய இசையாக வந்தவர் நீரே-2
இனிய இசையாக வந்தவர் நீரே-எங்கள் கர்த்தாவே

2.முகத்தின் கண்ணீரை துடைத்துவிட்டீரே
மனதின் காயங்கள் ஆற்றிவிட்டீரே-2
எந்தன் கடந்த நாட்கள் மறக்க செய்தீரே
இன்று புதிய வாழ்வு எனக்கு தந்தீரே-2
இன்று புதிய வாழ்வு எனக்கு தந்தீரே-எங்கள் கர்த்தாவே