Enthan Yesu Kaivida Matar - எந்தன் இயேசு கைவிடமாட்டார் J38

எந்தன் இயேசு கைவிடமாட்டார்
என்னை மறந்திட மாட்டார்

அல்லேலூயா அல்லேலூயா -4

1.நிந்தனை போரட்டத்தில்
நேசர் எனைத் தாங்கினார்
சோதனை வந்த போதெல்லாம்
தப்பிச் செல்ல வழி காட்டினார்

2.ஆயிரம் துன்பம் வந்தாலும்
அச்சம் எனக்கில்லையே
அரணும் கோட்டையும் அவர்
அத்தனையும் தகர்த்திடுவாரே

3.சீக்கிரம் வரப்போகின்ற
நேசருக்காய் காத்திருப்பேன்
எரியும் விளக்கேந்தியே
இயேசுவின் பின் செல்லுவேன்